Tuesday 14 November 2017

+2 வணிகவியல் பாட வழிகாட்டி: கடந்த நான்கு ஆண்டுகளாக அனைத்து வகை மாணவர்களையும் 100 % தேர்ச்சியும், 200க்கு 200 மதிப்பெண்களையும் பெற வைத்துவரும் வழிகாட்டி:அனைத்து வகை மாணவர்களுக்கும் பயன்படுத்தலாம்

+2 வணிகவியல் பாட வழிகாட்டி: அனைத்து வகை மாணவர்களுக்கும் பயன்படுத்தலாம்

FOR DOWNLOAD CLICK HERE

தயாரிப்பு:
சு.லோகநாதன்,
வணிகவியல் ஆசிரியர்,
அரசுமேல்நிலைப்பள்ளி,
அரசுநிலைப்பாளையம்,
திருச்சி மாவட்டம்.

ப.கார்த்திகேயன்,
வணிகவியல் ஆசிரியர்,
அரசுமேல்நிலைப்பள்ளி,
ஈசநத்தம்
கரூர் மாவட்டம்.

+1 வணிகவியல்: பாடம்-3: உள்நாட்டு வியாபாரம் Internal Trade- large scale ...



Vetrikodikattucommerce

Saturday 11 November 2017

வரி விகிதங்களைக் குறைக்கக் கோரிக்கை!

சரக்கு மற்றும் சேவை வரியின் கீழுள்ள வரி விகிதங்களைக் குறைக்க வலியுறுத்தி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமை வகிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) கவுன்சலிங் கூட்டம் நேற்று (நவம்பர் 10) நடைபெற்றது. இதில் 177 பொருள்களுக்கான வரி வரம்புகள் குறைக்கப்பட்டு. 50 பொருள்களின் வரி 28 சதவிகிதமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சரக்கு மற்றும் சேவை வரியின் ஒட்டுமொத்த கட்டமைப்பையே மாற்றியமைக்க வேண்டும் எனவும் வட்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்பட வேண்டும் எனவும் கர்நாடகா, புதுச்சேரி, பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள் மத்திய அரசுக்குக் கோரிக்கைக் கடிதங்கள் அனுப்பியுள்ளன. அதில் சரக்கு மற்றும் சேவை வரியின் உச்சபட்ச வரி வரம்பை 18 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் எனவும், பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையைச் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் கொண்டுவர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Wednesday 1 November 2017

விபத்து இழப்பீடு : புதிய விதிமுறைகள்!!!

சாலை விபத்தில் உயிரிழப்பவரின் குடும்பத்துக்கு
இழப்பீடு வழங்கப் பின்பற்றுவதற்கான புதிய விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் நேற்று(அக்டோபர் 31) வகுத்துள்ளது.

சாலை விபத்தில் உயிரிழப்பவரின் குடும்பத்துக்கு, மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு வழங்கப்படுகிறது. அதில், சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படும்போது, அதற்கான இழப்பீடுகளை வழங்கும்போது,உயிரிழந்தவரின் எதிர்கால வருமானம் கணக்கிடுவது தொடர்பாக 27 பேர் தொடுத்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.

இழப்பீடு வழங்குவதற்கான புதிய விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுத்து வழங்கியுள்ளது. அதில், இறந்தவர் தனியார் அல்லது அமைப்பு சாரா நிறுவனங்களில், நிரந்தரப் பணியாளராக இருந்து , 40 வயதுக்குள் இறந்தால், அவருடைய சம்பளத்துடன், 50 சதவிகிதம் கூடுதல் தொகையை, எதிர்கால வருவாயாகக் கணக்கிட வேண்டும்.

அதுபோன்று, 40 முதல் 50 வயதுள்ளவர்களுக்கு, 30 சதவிகிதமாகவும், 50 முதல் 60 வயதுள்ளவர்களுக்கு 15 சதவிகிதமாகவும், எதிர்கால வருவாயைக் கணக்கிட வேண்டும். இறந்தவர், சுய தொழில் அல்லது தொகுப்பூதியம் பெறுபவராக இருந்தால், 40 வயதுள்ளவர்களுக்கு 40 சதவிகிதம் எதிர்கால வருவாயாகக் கணக்கிட வேண்டும். இது 40 முதல் 50 வயதுள்ளவர்களுக்கு 25 சதவிகிதமாகவும், 50 முதல் 60 வயதுள்ளவர்களுக்கு , 10 சதவிகிதமாகவும் கணக்கிட வேண்டும்.

இழப்பீடு மற்றும் இறுதி சடங்குகளுக்கான தொகையை, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை, 10 சதவிகிதம் உயர்த்திக் கணக்கிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.