Sunday 21 July 2019

New Governors appointed for six states including UP, WB & MP

New Governors appointed for six states including UP, WB & MP

DD News

President has appointed Governors for six states. Madhya Pradesh Governor Anandi Ben Patel will now be the new Governor of Uttar Pradesh while Lal Ji Tandon, who is the Governor of Bihar, has been shifted to Madhya Pradesh. 

Phagu Chauhan will be the Governor of Bihar replacing Lal Ji Tandon. Jagdeep Dhankhar has been appointed as the new Governor of West Bengal while Ramesh Bais is the Tripura Governor. 

A Rashtrapati Bhavan communique said, R.N.Ravi will be the new Governor of Nagaland. The appointments will take effect from the dates they assume charge of their respective offices.

Tuesday 25 June 2019

உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஆனார் ஆஸி.யின் ஆஷ்லி பர்டி

உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஆனார் ஆஸி.யின் ஆஷ்லி பர்டி


DIN | Published: 25th June 2019 01:02 AM


 


நம்பர் ஒன் வீராங்கனை அந்தஸ்தைப் பெற்ற ஆஷ்லி பர்டி.

பர்மிங்ஹாம் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றதின் மூலம் முதன்முறையாக உலகின் நம்பர் ஒன் வீராங்கனை அந்தஸ்தை கைப்பற்றியுள்ளார் ஆஸி. வீராங்கனை ஆஷ்லி பர்டி.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஜூலியா ஜார்ஜஸை 6-3, 7-5 என நேர்செட்களில் வென்றார் ஆஷ்லி. 
23 வயதான ஆஷ்லி பர்டி, கடந்த மே மாதம் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். தற்போது பர்மிங்ஹாம் போட்டியில் பட்டம் வென்றதின் மூலம் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகாவை பின்னுக்கு தள்ளி, நம்பர் ஒன் வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார்.
கடந்த 1976-இல் ஆஸி. வீராங்கனை எவோன் கூலாங் காவ்லி 2 வாரங்கள் முதலிடத்தை வகித்து இருந்தார்.
ஆடவர் பிரிவில் ஜான் நியூகோம்ப், பேட் ராப்டர், லெய்டன் ஹெவிட் ஆகியோர் முதலிடத்தை வகித்துள்ளனர்.
நம்பர் ஒன் இடத்தைப் பெற்ற ஆஷ்லிக்கு டென்னிஸ் ஆஸ்திரேலியா தலைவர் கிரெய்க் டைலி பாராட்டியுள்ளார்.
ஆஸி. நாட்டு பத்திரிகைகளும் அவரை டென்னிஸ் உலகின் புதிய ராணி என பாராட்டியுள்ளன.
ஆஷ்லி பார்ட்டி ஆஸ்திரேலிய பூர்வக் குடியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மறைவு

பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மறைவு


DIN | Published: 25th June 2019 12:59 AM


பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் சதார் காலமானார். அவருக்கு வயது 88.

பாகிஸ்தான் அதிபரான முஷாரப் பதவி வகித்த காலத்தில், இந்தியாவின் ஆக்ரா நகரில் இருநாடுகளிடையேயான உச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது முஷாரப்புடன் அப்துல் சதாரும் ஆக்ரா வந்திருந்தார். பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சராக இருமுறை அவர் பதவி வகித்துள்ளார்.
இந்தியா, ஆஸ்திரியா, முன்னாள் சோவியத் யூனியன் குடியரசு ஆகிய நாடுகளுக்கான பாகிஸ்தான் தூதராகவும் அவர் இருந்துள்ளார். 1986ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரையிலும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலராகவும் பதவி வகித்துள்ளார். எழுத்தாளராகவும் விளங்கிய சதார், பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக  புத்தகமும் எழுதியுள்ளார்.
அவரின் மறைவுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது. அப்துல் சதாரின் மறைவுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 - Dinamani 25/06/19

Friday 21 June 2019

10 அவசர சட்ட நகல்கள் பார்லிமென்டில் தாக்கல்

பிரதமர் மோடியின் முந்தைய அரசின் கடைசி சில மாதங்களில், அவசர சட்டங்கள் சில பிறப்பிக்கப்பட்டன. அவற்றை, சட்ட மசோதாக்களாக மாற்ற, மத்திய அமைச்சரவை, சமீபத்தில் ஒப்புதல் அளித்திருந்தது. அதன்படி, அவற்றை சட்டமாக மாற்ற, அவசர சட்டத்தின் நகல்கள் நேற்று(ஜூன் 20), பார்லிமென்டின், இரு சபைகளிலும் தாக்கல் செய்யப்பட்டன. பார்லிமென்ட் விவகாரத் துறை இணையமைச்சர்கள், அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் வீ.முரளீதரன் அவற்றை தாக்கல் செய்தனர்.

நடப்பு கூட்டத்தொடரில், 45 நாட்களுக்குள் அவை, சபைகளில் தாக்கல் செய்யப்பட்டு, சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும்; இல்லையேல் காலாவதியாகி விடும். நேற்று தாக்கல் செய்யப்பட்ட, அவசர சட்டங்களின் நகல்களில் முக்கியமானவை
வாகரத்து செய்ய, மூன்று முறை, 'தலாக்' என்ற வார்த்தையை சொல்வது சட்ட விரோதம் என்பதை வலியுறுத்தும், முத்தலாக் அவசர சட்டம்
* இந்திய மருத்துவ கவுன்சில் அவசர சட்டம்
* கம்பெனிகள் அவசர சட்டம்
* ஒழுங்கற்ற முதலீட்டு திட்டங்கள் அவசர சட்டம்
* ஜம்மு மற்றும் காஷ்மீர் இட ஒதுக்கீடு அவசர சட்டம்
* ஆதார் மற்றும் பிற அவசர சட்டங்கள்
* சிறப்பு பொருளாதார மண்டல அவசர சட்டம்
* மத்திய கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள் இட ஒதுக்கீடு அவசர சட்டம் மற்றும் சில.

Monday 14 January 2019

தன்னம்பிக்கை ஊட்டும் தேர்வு

தன்னம்பிக்கை ஊட்டும் தேர்வு -2

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1.ஒரு இயக்குனர் ______ செயலாற்றுகிறார்.

2.இயக்குனர்கள் _________ தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்

3.______பகுதி இயக்குனர்கள் சுழல் முறையில் பதவி விலக வேண்டும்

4.கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் வரிசை______ எனப்படும்

5.இயக்குனர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி பங்குகளின் மதிப்பு____

6.பங்கு மாற்றம் இதில் ஈடுபட்டிருக்கிறது_____

7.இந்தியாவில் பங்குகளை விற்க பயன்படுத்தப்படும் பிரபலமான முறை _______

8._______முறையில் ஏற்கனவே இருக்கும் பழைய பங்குதாரர்களுக்கு புதிய பங்குகளை நிறுவனங்கள் வழங்குகின்றன

9.இதிலும் கெட்டதையே காண்கின்ற மனப்பாங்கு கொண்டவர் ______

10.சிறுதுளி பெருவெள்ளம் என்கிற பழமொழிக்கு ஏற்ப இருக்கும் முதலீட்டு முறை _______

11. கூட்டுறவு சங்கத்தில் குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கை _____

12. ஒரு கூட்டுறவு சிறப்பங்காடி அளிப்பது ______

13. மத்திய கூட்டுறவு வங்கி தொடங்கப்படுவது _______

14. ஜெர்மனியில் இயங்கிவந்த கூட்டுறவு ஊரக வங்கிகளின் அமைப்பு செயல்முறை ஆகியவற்றை பார்வையிட்டு நம் நாட்டில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட குழுவின் தலைவர் ______

15._____என்பது கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் பொருட்களை சேமித்து வைக்கும் வசதி தருகிறது.

16.அரசுக்கு சொந்தமாகவும் அதன் கட்டுப்பாட்டின் கீழும் உள்ள தொழில்கள் _____ தொழில்களாகும்.

17.ஏற்கனவே தனியார் துறையில் இயங்கி வரும் தொழில்களை அரசே ஏற்று நடத்தினால் அதற்கு ______ என்று பெயர்.

18.அரசு நிர்வாகத்தில் அரசு கொண்டிருக்க வேண்டிய குறைந்தபட்ச பங்கு முதல் _______

19. ______ ஒரு சிலரிடம் பொருளாதார வலிமை செல்வதை தடைசெய்கிறது

20. அரசு தொழில் அமைப்புகளில் மிகவும் தொன்மையானது _______

எல்லா வினாக்களுக்கும் விடையளி

21.சட்டமுறை கூட்டம் என்றால் என்ன.?

22.பத்திரம் என்றால் என்ன.?

23.ஆண்டு பொதுக் கூட்டத்தில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை.?

24.பங்கு மாற்றத்தின் வரைவிலக்கணம் தருக.

25.கூட்டுறவு வரையறு

26.தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சிறப்பங்காடி எடுத்துக்காட்டுகள் தருக

27. ராணுவம் சார்ந்த தொழில்களுக்கு துறைமுக அமைப்பு சிறந்தது என எதனால் கூறப்படுகிறது.?

எல்லா வினாக்களுக்கும் விடையளி

28.மாற்று இயக்குனர் என்பவர் யார்.?

29. சட்டமுறை அறிக்கையில் காண பெற வேண்டியவை யாவை.?

30.முதலீட்டாளர் ஊக வணிக வேறுபடுத்துக.

31.அரசு தொழில் என்பதன் வரைவிலக்கணம் தருக.

32.முடவாத்து என்று யாரைக் குறிப்பிடுவர்.?

33.கூட்டுறவு அமைக்க பின்பற்ற வேண்டிய முறைகளை விளக்குக.

34.பொதுத்துறை தனியார்த்துறை வேறுபடுத்துக.

எல்லா வினாக்களுக்கும் விடையளி

35.அரசு தொழில்களின் நோக்கங்கள் யாவை (ஏதேனும் ஐந்து)

36.கூட்டுறவு அமைப்பின் முக்கிய சிறப்பு இயல்புகள் யாவை.?

37.விளக்கக் குறிப்பு தருக
பகராள், குறைவெண், சட்டமுறை கூட்டம்,ஆண்டு பொதுக்கூட்டம்.

38.நிறுமச் செயலரின் பணிகளை கூறு.

39.செபியின் நோக்கம் இயல்புகள் பணிகளை விளக்கு.

40.கூட்டுப்பங்கு நிறுமம் கூட்டுறவு சங்கம் வேறுபடுத்துக.

41.ஊக வணிகர்களின் வகைகளை விவரி.