Saturday 30 September 2017

வீட்டு கடன் பெறுபவர்கள் கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்

இன்றைய சூழ்நிலையில் அரசுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் ஆகியவை தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கடன்களை வழங்க தயாராக உள்ளன.

வீட்டு கடன் பெறுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய 10 முக்கியமான விஷயங்கள் பற்றி ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவை:

1) வங்கி அல்லது நிதி நிறுவனம்

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், தனியார் வீட்டு வசதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வீட்டு வசதி நிறுவனங்கள் என்று பல அமைப்புகள் வீட்டு கடன் வழங்குகின்றன. பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற பலமுறைகள் அங்கே செல்ல வேண்டும் என்ற நிலையில், தனியார் நிதி நிறுவனங்கள் வீட்டுக்கே வந்து கடனுக்கான ஏற்பாடுகளை செய்வதும் உண்டு. பொதுவாக, தனியார் வீட்டு வசதி நிறுவனங்களை விட பொதுத்துறை வீட்டு வசதி நிறுவனங்களில் வட்டி சற்று குறைவாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

2) கடனுக்கான வட்டி

நிலையான (பிக்ஸ்டு) வட்டி, மாறுபடும் (புளோட்டிங்) வட்டி என இரு விதமான வட்டி விகிதங்கள் வீட்டு கடனுக்கு கணக்கிடப்படுகின்றன. நிலையான வட்டியை 3 அல்லது 5 வருடங்களுக்கு பிறகு புளோட்டிங் வட்டி முறைக்கு மாற்றம் செய்து கொள்ளவும் இயலும்.

கடன் பெறுபவரின் சிபில் ரேட்டிங் அதிக ஸ்கோர்கள் பெற்றிருந்தால், வட்டி விகிதத்தில் குறைக்க சொல்லி வங்கியில் கேட்கும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், வட்டி கணக்கிடும் முறையானது கடன் தொகை குறைவதற்கேற்ப கணக்கிடுவது, ஆண்டுக்கு ஒரு முறை கணக்கிடுவது என இரண்டு வகையாக உள்ளது. அவற்றில் மாதத்தவணை குறைவாக உள்ள வங்கி அல்லது நிதி நிறுவனத்தை தேர்வு செய்யலாம்.

3) மார்ஜின் மணி

வீடு அல்லது மனைக்கான ஒட்டு மொத்த தொகையும் கடனாக நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் தருவதில்லை. அதனால், சுமாராக வீட்டின் மொத்த மதிப்பில் 20 சதவிகித தொகையை கையிருப்பாக வைத்திருக்க வேண்டும். அதனால், கடன் தொகையை குறைத்து சிறிய வீடாக வாங்கலாம். பொதுவாக, வீட்டு கடனுக்கான மாத தவணை ஒருவரது மாதச் வருமானத்தில் 45 சதவிகிதத்துக்கும் மேற்படாமல் இருப்பது நல்லது.

4) பல்வேறு கட்டணங்கள்

வீட்டு கடன் பெறும்போது, அதற்கான பரிசீலனை கட்டணம், ஆவண கட்டணம், பில்டிங் வேல்யூவேஷன், லீகல் ஒப்பீனியன் ஆகிய கட்டணங்கள் வங்கிகள் அல்லதி நிதி நிறுவனங்களை பொறுத்து பெறப்படுகின்றன. ஒட்டு மொத்த கட்டணங்கள் குறைவாக உள்ள நிறுவனத்தை கவனத்தில் கொண்டு கடன் பெறலாம்.

5) வீட்டு கடன் ஒப்புதல்

பொதுவாக, வீட்டு கடனுக்கு ஒப்புதல் அளிப்பது வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தின் கிளையா..? அல்லது அதன் மத்திய பரிசீலனை மையமா..? (சென்ட்ரலைஸ்டு பிராசஸிங் சென்டர்) என்று கவனிக்க வேண்டும். கிளை அலுவலகம் கடன் வழங்கும் பட்சத்தில் கடன் விரைவாக கிடைக்க வாய்ப்புள்ளது. வங்கியின் மத்திய பரிசீலனை மையம் வீட்டு கடவை வழங்கும் பட்சத்தில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையை பொறுத்து கால தாமதம் ஆகும். இந்த அடிப்படையை மனதில் கொள்ளலாம்.

6) கடன் தொகைக்கான காசோலை

வீட்டு கடனுக்கான காசோலையை வீடு கட்டும் கான்ட்ராக்டர் அல்லது கட்டுனருக்கு வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனம் வழங்கும்போது அந்த தகவல் கடன் பெற்றவருக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்து கொள்வது முக்கியம்.

7) தவணை காலம்

நீண்ட கால தவணையில் கடனை திருப்பி செலுத்தும்போது மாத தவணை குறைவாகவும், குறுகிய கால தவணைக்கு வட்டி தொகை குறைவாகவும் இருக்கும். அதாவது, தவணைக்காலம் அதிகரிக்கும்போது செலுத்தப்படும் வட்டி அதிகரிக்கும். அதன் அடிப்படையில் வருங்காலங்களில் தவணையை அதிகரித்து வட்டியை மிச்சப்படுத்தலாம்.

8) கடன் தொகை

அஸ்திவாரம், பிளிந்த், நிலை, ரூப் என்று பல்வேறு நிலைகளில் கடன் தொகை அளிக்கப்படுவது வழக்கம். கட்டப்படும் வீட்டின் நிலைக்கேற்ப வங்கி மேலாளர்களே கடன் தொகையை வழங்குவதும் உண்டு. அல்லது வங்கிக்கான எஞ்சினியர் ஒப்புதல் தந்த பிறகு கடன் தொகை தரப்படுவதும் உண்டு. வங்கி அல்லது நிதி நிறுவனங்களின் மேற்கண்ட நடைமுறைகளை தெளிவுபடுத்திக்கொண்டு செயல்படுவது நல்லது.

9) மாரடோரியம் பீரியடு

பொதுவாக, வீட்டின் கட்டுமான பணிகள் நிறைவடைய சுமாராக 18 மாதங்கள் ஆகலாம். அந்த காலகட்டத்தில் வீட்டு கடன் 3 அல்லது 4 பிரிவுகளாக வழங்கப்பட்டிருக்கும். அந்த தொகைகளுக்கான பிரீ இ.எம்.ஐ மற்றும் வட்டி ஆகியவற்றை தவறாமல் செலுத்தி விடுவது அவசியம்.

10) கட்டுமான நிறுவனம்

கட்டுமான பணிகளை செய்யும் கான்ட்ராக்டர் அல்லது பில்டிங் புரமோட்டர் ஆகியோர்களை தேர்ந்தெடுப்பது முக்கியமான அம்சமாகும். இந்த விஷயத்தில் அவர்களது முந்தைய புராஜெக்ட் பற்றி விசாரித்து அறிந்து கொண்டு தேர்வு செய்யலாம்.

Have an SBI account? Just a reminder about the rule changes that will impact you from Sunday

If you are an account holder in State Bank of India (SBI), the country's largest lender, there are a few changes that you need to be aware of. If you haven't read about them, here they are:

1) Cut in MAB: The bank has decided to treat the metro and urban centres in the same category as far as average minimum account balance (MAB) maintenance is concerned. What this means is that the MAB in metro centres has been reduced to Rs 3,000 from Rs 5,000 earlier. For semi-urban branches, the MAB is Rs 2,000 and for rural branches Rs 1,000. So in case you are in metro centres, now you need to maintain the average MAB at Rs 3,000 from Sunday, 1 October.

Reuters.

2) Cut penalties for non-adherence:For non-maintenance of MAB, the charges have also been revised downwards ranging from 20-50 percent across all population groups and categories. Now, the charges at semi-urban and rural centres range from Rs 20 to Rs 40 and at urban and metro centres from Rs 30 to Rs 50, the bank has said. Earlier, in the metros, the bank was charging Rs 100 plus GST if the balance fell below 75 percent of the MAB of Rs 5,000. If the shortfall was 50 percent or less, the penalty charge was Rs 50 plus GST. Any shortfall in maintaining minimum average balance in rural areas was attracting a penalty in the range of Rs 20 to Rs 50 plus GST.

3) Categories exempted: The bank has decided to exempt pensioners, beneficiaries of social benefits from the government and minors from the requirement of minimum balance in savings account. The bank reiterated that basic savings bank deposit and PMs Jan-Dhan accounts are not required to maintain the minimum balance.

SBI has 42 crore savings bank accounts. Of this, 13 crore come under PMJDY/ BSBD. The revision is likely to benefit another 5 crore account holders, the bank has said.

4) Apart from this, if you hold account in State Bank of Patiala, State Bank of Bikaner and Jaipur, State Bank of Raipur, State Bank of Travancore, State Bank of Hyderabad or Bhartiya Mahila Bank (BMB), your cheque books will be come invalid from 1 October unless you have got a new one. The IFS code of your branch will also be different from that day. This is because these banks have been merged with SBI now.

Best tax saving mutual funds or ELSS to invest in 2017

Equity Linked Savings schemes or ELSSs are often called the 'first' mutual fund scheme. This is because most mutual fund investors get into mutual funds via ELSSs or tax saving/planning mutual fund schemes. Investments in ELSSs qualify for tax deductions of up to Rs 1.5 lakh under Section 80C of the Income Tax Act. Most investors start investing in ELSSs to save taxes, and slowly they start investing in other equity mutual fund schemes. 

If you are not investing in ELSSs to save taxes under Section 80C, you should reconsider your decision to stick to traditional tax-saving options like Public Provident Fund (PPF), National Savings Certificate (NSC), etc. The government-backed tax-saving options offer assured returns. However, the returns are likely to be modest. So, using these options to fund your long-term financial goals may not be a wise idea. 

ELSSs come with the shortest mandatory lock-in period of three years among the tax-saving options available under Section 80C. Other popular options like PPF and NSC have a much longer lock-in period. Though PPF allows partial withdrawal after five years, it is a product with a tenure of 15 years. NSC has a lock-in period of six years. 

Sure, ELSSs are riskier than government-sponsored schemes. This is because ELSSs invest in stocks and stocks are risky and volatile in the short-term. That is why it is important to invest in ELSSs with a longer horizon than the mandatory three-year lock-in period. Since ELSSs are equity schemes, investor should be prepared to stay invested for at least five to seven years. 

However, ELSSs also reward investors for the extra risk. For example, ELSS category has offered tax-free returns of around 13.52 per cent in three years, 17.29 per cent in five years, and 9.83 per cent in the 10-year horizon. Other government-backed schemes offer single-digit returns. 

If you are interested in investing in ELSSs, here are our recommended schemes: L&T Tax Advantage Fund, Aditya Birla Sun Life Tax Relief 96, DSP BlackRock Tax Saver Fund. You may invest in these schemes via Systematic Investment Plans (SIPs). Keep an investment horizon of at least five years in mind. Also, try to link your ELSS investment to a long-term financial goal. 

“பணமதிப்பிழப்பு இந்திய பொருளாதாரத்தின் பெரும் சீரழிவு” - யஸ்வந்த் சின்ஹா

இந்திய பொருளாதாராம் மிகவும் பின்தங்கிய நிலையை நோக்கி சென்று கொண்டு இருப்பதாகவும் அதற்கு காரணம் தற்போதைய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி எனவும் தனியார் நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான யஸ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதிய கட்டுரையில், நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஏற்படுத்தியுள்ள பொருளாதார குழப்பம் குறித்து இப்பொழுதும் பேசவில்லை என்றால் அது இந்த தேசத்திற்கு செய்யும் பெரிய துரோகம் என குறிப்பிட்டுள்ளார். 

நிதியமைச்சராக அருண் ஜேட்லி பொறுப்பேற்று மூன்றாண்டுகளுக்கு பிறகும், தனியார் முதலீடுகள், நிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் வளர்ச்சிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பாதிப்புகள் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்படாத அளவுக்கு பெரிய பாதிப்பு எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கட்டுமான தொழில், விவசாயம், ஏற்றுமதி துறை என அனைத்து தொழில் பிரிவுகளும் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் யஸ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த பொருளாதார சீரழிவு என அவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 5.7% என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த கணக்கீடு, பணமதிப்பிழப்புக்கு பிறகு கொண்டுவரப்பட்ட புதிய விதிகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது எனவும், பழைய முறைகளின் படி கணக்கிட்டால் ஜூன் முதல் ஏப்ரல் வரையிலான பொருளாதார வளர்ச்சி வெறும் 3.7% மட்டுமே எனவும் யஸ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என யஸ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். 

தேர்தல் பிரசாரத்தில் பொய்களை முழக்கங்களாக வெளியிட்டு ஓட்டுகளை வாங்கினாலும் அந்த முழக்கங்கள் எல்லாம் நிஜத்தில் நிறைவேறவில்லை எனவும் யஸ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். மேலும் இந்த பொருளாதாரா வீழ்ச்சி மற்றும் பொருளாதார மந்த நிலையால் 2019ம் ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இப்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களை சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல எனவும் யஸ்வந்த் சின்ஹா அவருடைய கட்டுரையில் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த பொருளாதார சிக்கல்கள் குறித்தும் மோடி மற்றும் அருண் ஜேட்லியின் நடவடிக்கைகள் குறித்தும் பல பாஜக தலைவர்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், அதனை குற்றச்சாட்டுகளாக தெரிவிக்க அவர்கள் பயப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

40 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது இந்தியா

இந்திய அமெரிக்க நல்லுறவின் ஒரு பகுதியாக முதன்முறையாக அமெரிக்காவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது இந்தியா, முதல்கட்டமாக வரும் திங்களன்று 2 மில்லியன் பீப்பாய்கள் கொண்ட எண்ணெய் கப்பல்கள் இந்தியா வருகிறது.

இந்தியா-அமெரிக்கா இடையே எண்ணெய் ஏற்றுமதி செய்ய கடந்த 40 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி, அமெரிக்கா சென்று அப்போதைய அதிபராக இருந்த ஒபாமாவை சந்தித்தார். இதையடுத்து எண்ணெய் ஏற்றுமதிக்கான தடை விலக்கி கொள்ளப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி தற்போதைய அதிபரான டெனால்ட் டிரம்ப்பை சந்தித்து எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டார். இதில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யவதற்கான ஒப்பந்தம் உறுதியானது.

Friday 29 September 2017

அடுத்த 10 ஆண்டுகளில்... மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 6 லட்சம் கோடி டாலராக உயரும்

‘இந்­தியா, வேக­மாக மின்­னணு மய­மாகி வரு­வ­தால், அடுத்த, 10 ஆண்­டு­களில், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி மதிப்பு, 6 லட்­சம் கோடி டால­ராக உய­ரும்’ என, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.சர்­வ­தேச நிதிச் சேவை நிறு­வ­ன­மான, மார்­கன் ஸ்டான்லி, ‘இந்­திய மின்­னணு துறை­யின் பர­வ­லாக்­கம் மற்­றும் பல லட்­சம் கோடி டாலர் வாய்ப்பு’ என்ற ஆய்­வ­றிக்­கையை வெளி­யிட்டு உள்­ளது.

700 new FPIs registered with SEBI in 1st 4 months of 2017-18

More than 700 new foreign portfolio investors (FPIs), registered with SEBI in the first four months of 2017-18. This follows nearly 3,500 new FPIs registering with SEBI in the previous financial year. The figures indicate that India remains an attractive destination. 

According to data from capital market regulator, SEBI, the number of FPIs with the regulator's approval rose to 8,511 at the end of July 2017, from 7,807 at March-end. 

Foreign investors have also pumped in more than one lakh crore rupees into the domestic capital markets during the period under review. This includes 84,000 crore rupees in debt, and the rest in equities. In June, the SEBI board decided to ease the entry norms for overseas investors by permitting direct access to FPIs from eligible jurisdictions.

GST revenue collections in August at Rs 90,669 cr

Goods and Services Tax (GST) revenue collections in August stood at 90,669 crore rupees. 

Out of this, CGST revenue is 14,402 crore rupees, SGST 21,067 crore, IGST 47,377 crore and Compensation Cess is 7,823 crore rupees. This figure of GST revenue collection is upto 25th of September. 

According to an official release, the figure, however, do not include the GST to be paid by 10.24 lakh assessees, who have opted for the composition scheme. 

Additionally, there are still a number of assessees who have not filed their return either for July or August- 2017. 

The Finance Ministry also released the revised data of GST collection for July which is to the tune of 94,063 crore rupees.

Wednesday 27 September 2017

+1 அனைத்து பாடங்களுக்கான மாதாந்திர பாடத்திட்டம்

For download click here

வருகிறது 5ஜி தொழில்நுட்பம் 2020 ல்.


2020-ஆம் ஆண்டில் 5ஜி தொழில்நுட்பம்: மத்திய அரசு முடிவு

இந்தியாவில் வரும் 2020-ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன்களுக்கான 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதலுக்காக உயர்நிலைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா இது தொடர்பாகக் கூறியதாவது:
5ஜி தொழில்நுட்பத்தின் மூலம் நகர்ப்புறங்களில் பிராட்பேண்ட் சேவையின் வேகம் 10,000 எம்பிபிஎஸ் ஆகவும், கிராமப்புறங்களில் 1,000 எம்பிபிஎஸ் ஆகவும் இருக்கும். இதற்காக மத்திய அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்து தொலைத்தொடர்புத் துறை செயலாளர் அருண் சுந்தர்ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் அஜய் குமார், அறிவியல்-தொழில்நுட்பத் துறை செயலாளர் அஷுதோஷ் சர்மா உள்ளிட்டோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
5ஜி தொழில்நுட்பத்தில் பயன்படுத்தக் கூடிய ஸ்மார்ட்போன் உள்ளிட்ட கருவிகள் இந்தியாவில் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. நமது நாட்டில் பயன்படுத்தப்படும் 5ஜி ஸ்மார்ட்போன் உள்ளிட்ட கருவிகளில் உள்நாட்டுத் தயாரிப்புகள் 50 சதவீதம் இருக்க வேண்டும். சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் 5ஜி கருவிகளில் இந்தியத் தயாரிப்புகள் 10 சதவீதம் இருக்க வேண்டுமென்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் ஏற்பட்டு, பொருளாதார வளர்ச்சி வேகமாக அதிகரிக்கும்.
5ஜி தொழில்நுட்பத்தில் சிக்கல் வாய்ந்த மருத்துவக் கருவிகள், ஓட்டுநர்கள் இல்லாமல் இயங்கக் கூடிய கார் ஆகியவற்றைப் பயன்படுத்த முடியும். 5ஜி கருவிகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இருக்கும் என்றார் அவர்.

பங்குச்சந்தைகள் சரிவு முடிந்தன

இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. ரூபாயின் மதிப்பு சரிவு, ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் ஆரம்பமான நிலையில் அந்த சரிவு நாள் முழுக்க நீடிக்க, இறுதியில் பங்குச்சந்தைகள் சரிவுடனே முடிந்தன.

வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 26.87 புள்ளிகள் சரிந்து 31,599.76-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 1.10 புள்ளிகள் சரிந்து 9,871.50-ஆகவும் முடிந்தன.

வங்கி வேலையிலும் உத்தரவாதமில்லை!


முன்பெல்லாம் வேலை இழப்பு என்பது முக்கிய செய்தியாக இருந்த சூழலில் தற்போது பத்தோடு பதினொன்றாக வேலை இழப்பு செய்திகள் மாறும் அளவுக்கு வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றன. நிறுவனம் நஷ்டத்தை சந்திக்கும் போதும், இழுத்து மூடப்படும் போதும் மட்டுமே முன்பு வேலை இழப்புகள் ஏற்பட்டன. ஆனால் தற்போது நிறுவனத்தை சிறப்பான நிலையில் தக்கவைத்துகொள்ள, டிஜிட்டல்மயம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக வேலை இழப்புகள் நடக்கின்றன.

இந்தியாவின் முக்கியமான தனியார் வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎப்சி தொடர்ந்து பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகிறது. கடந்த மார்ச் காலாண்டில் மட்டும் இந்த வங்கி 6,096 நபர்களை பணியில் இருந்து நீக்கி இருக்கிறது. வங்கி டிஜிட்டல் மயமாகி வருவதால் இந்த நடவடிக்கை என வங்கியின் துணை நிர்வாக இயக்குநர் அப்போது தெரிவித்திருந்தார். மனிதர்களின் துணையில்லாமல் தனிநபர் கடன் வழங்க முடியும். இதுபோல பணம் டெபாசிட் செய்தல் உள்ளிட்ட பல சேவைகளை வழங்க முடிவதால் மனிதர்களுக்கான தேவை குறைவு என்று கூறினார். இத்தனைக்கும், இந்த காலாண்டில் வங்கி கிளைகளின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது. முந்தைய டிசம்பர் காலாண்டிலும் 4,581 நபர்களை இந்த வங்கி நீக்கியது. வரும் காலாண்டுகளிலும் இதுபோன்ற நடவடிக்கை இருக்கும் என அப்போது கூறினார்.

ஹெச்டிஎப்சி வங்கியை தொடர்ந்து யெஸ் வங்கியும் 2500-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கி இருக்கிறது. இந்த வங்கியின் ஒட்டு மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் இது 10 சதவீதமாகும். தவிர பணியாளர்களின் செயல்பாடுகள் மீது வழக்கமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என வங்கி விளக்கம் அளித்து இருக்கிறது.

முதலிடத்தில் இருக்கும் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ இந்த ஆண்டு அதிகளவில் பணியாளர்களை எடுக்கப்போவதில்லை என்றும், நடப்பு நிதி ஆண்டு இறுதியில் உயரதிகாரிகள் சிலரை பணிக்கு எடுக்கவும் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. முன்பெல்லாம் வங்கியில் சேர்ந்துவிட்டால் நிலை யான நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்னும் தோற்றம் இருந்தது. ஆனால் இப்போது வரும் செய்திகள் இனி வங்கி வேலையும் உத்தரவாதமில்லை என்பதை உணர்த்துகிறது.

வாடிக்கையாளர்களின் பொது வான சந்தேகங்களை விளக்குவதற்கு வங்கிகள் ரோபோக்களை பயன்படுத்த தொடங்கி இருக்கின்றன. சிட்டி யூனியன் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவை ரோபோக்களை பயன்படுத்த தொடங்கி இருக்கிறது. வருங்காலத்தில் ரீடெய்ல் பேங்கிங் பிரிவை கூட இவை கையாளும் வாய்ப்புகள் இருப்பதாகவே கணிக்கப்படுகின்றன.

தவிர பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. வங்கிகள் இணையும் பட்சத்தில் வேலை இழப்புகளும் தவிர்க்க முடியாததாகி விடும். செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோக்கள் காரணமாக அடுத்த ஐந்தாண்டுகளில் 30 % வங்கி பணி கள் கேள்விக்குறியாகும் என சிட்டி வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி விக்ரம் பண்டிட் தெரிவித்திருக்கிறார். வங்கித்துறையில் குறைந்த திறன் கொண்ட அல்லது புதிய திறனை வளர்த்துக்கொள்ளாத பணியாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறிதான்

Tuesday 26 September 2017

சவுபாக்யா திட்டம் என்றால் என்ன? அதன் பயன்கள்..

சவுபாக்யா திட்ட அறிமுக நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சவுபாக்யா திட்டத்தின் மூலம் நாட்டின் மின் விநியோகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்தார். 

கடந்த 3 ஆண்டுகளில் நாடெங்கிலும் 33 லட்சம் எல்.இ.டி தெரு விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதாகக் கூறிய மோடி, எல்.இ.டி மின் விளக்குகளின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

‘சவுபாக்யா திட்டம்’ மற்றும் அதன் இலக்குகள் குறித்த விபரங்களைத் தற்போது காண்போம். 

நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும், 24 மணி நேரமும் மின் சேவை கிடைப்பதை 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் உறுதி செய்வதே சவுபாக்யா திட்டத்தின் முக்கிய இலக்கு ஆகும்.

இந்த திட்டத்தின்படி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இணைப்புக் கட்டணம் ஏதுமின்றி இலவசமாக மின் இணைப்புக் கொடுக்கப்படும்.

வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் 500 ரூபாய் மின் இணைப்பு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தொகையை 10 தவணைகளில் மின்சாரக் கட்டணத்துடன் சேர்த்து செலுத்தலாம்.

2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பம் அளித்த உடனேயே மின் இணைப்புக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும்.

16,320 கோடி ரூபாய் செலவில் சவுபாக்யா திட்டம் செயல்படுத்தப்படுகிறது

திட்டத்திற்கான மொத்த நிதியில் 60 சதவீதத்தை மத்திய அரசு கொடுக்கும். 10 சதவீதத்தை மாநில அரசுகள் ஒதுக்க வேண்டும். 30 சதவீத தொகை கடன்களாக வழங்கப்படும்.

அனைத்து பகுதிகளுக்கும் மின் சேவையை வழங்குவது சவுபாக்யா திட்டத்தின் முக்கிய இலக்காக இருந்தாலும் மண்ணெண்ணைக்கு மாற்று எரிபொருள் வழங்குவது, ஏழைகளுக்கான கல்வி, சுகாதாரம், தொலை தொடர்பு சேவைகளை மேம்படுத்துவது, வேலை வாய்ப்பை அதிகரிப்பது உள்ளிட்டவையும் இந்த திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.      

மாணவர்களுக்கு விரைவில் விபத்து காப்பீடு திட்டம்

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கோபியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக இந்த ஆண்டு முதல் கூடுதலாக 1000
தேர்வு மையங்கள் அமைக்கப்படும். நீட் தேர்வு உள்பட மத்திய அரசு கொண்டு வரும் எந்தவொரு போட்டித்தேர்வையும் சந்திக்கும் வகையில் ஏற்கனவே 412 மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

தற்போது கூடுதலாக மையங்கள் அமைக்கப்படும். கற்றலில் குறைபாடு உள்ள 10 சதவீத மாணவர்களுக்காக அடுத்த மாதம் முதல் வகுப்பறையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அதைத்தொடர்ந்து விபத்து காப்பீடு திட்டமும் செயல்படுத்தப்படும். அரசின் இலவச பொருட்களை கொண்டு செல்ல வாகன வாடகை அரசே வழங்குகிறது. அதில் ஏதேனும் தவறு ஏற்பட்டு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மாதம் 32 இடங்களில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி மையம் தொடங்கப்படும். அதற்கான பயிற்சியாளர் தேர்வு நடந்து வருகிறது.

அதன்பின் புத்தங்கள் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக 2.17 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மாணவர்களுக்கு தமிழ் பாடபுத்தகங்கள் வழங்குவது குறித்து இலங்கை அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அனுமதி கிடைத்தவுடன் ஒரு லட்சம் பிரதிகள் இலங்கைக்கு அனுப்பப்படும். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

 

சேமிப்பு கணக்குகளின் ‘மினிமம் பேலன்ஸ்’ வரம்பை குறைத்தது எஸ்பிஐ..!!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் சேமிப்புக் கணக்குகள் மீதான குறைந்தபட்ச இருப்புத் தொகை மீதான வரம்பைக் குறைத்தது.

மெட்ரோ நகரங்கள் மற்றும் பெறு நகரங்களில் ஒரே அளவிலான குறைந்தபட்ச இருப்புத் தொகையினை அளிக்க எஸ்பிஐ வங்கி முடிவு செய்துள்ளது.

மினிமம் பேலன்ஸ் குறைப்பு

எனவே இனி மெட்ரோ மற்றும் பிற நகர்ப்புற எள்பிஐ வங்கி கிளைகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் 3,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை ஒவ்வொரு மாதமும் வைத்து இருந்தால் போதும். இதற்கு முன்பு 5,000 ரூபாயாக இருந்தது.

Sunday 24 September 2017

இந்தியாவில் நம்பிக்கை வங்கி பட்டியலில் முதலிடத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

வங்கியின் செயல்பாடு குறித்த ஆய்வில் இந்தியாவில் நம்பிக்கையான வங்கி எது என்ற கேள்விக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் வங்கியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள். 

'பிராண்ட் பைனான்ஸ்' என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், 500 உலக வர்த்தக நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவில் 'ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ)' பிரபலமான வங்கியாகவும், நம்பிக்கையான வங்கியாகத் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. 

ஏற்கெனவே எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள், 'எஸ்பிஐ வங்கி கணக்கில் இருந்து இதர வங்கிக்கு மாற மாட்டோம்' என்றும், இதர வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் 21.4% பேர் 'தங்களுடைய வங்கி கணக்கை 'ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா' மாற்றத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த வகையில் நம்பிக்கைதன்மை, நாணயம், முக்கியமான வங்கி என்ற வகையில் எஸ்பிஐ வங்கியில் முதல் இடத்தில் இருக்கிறது. 

நம்பிக்கையான வங்கிகளில் ஹெச்.டி.எஃப்.சி வங்கியும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவும் முன்னணியில் இருக்கின்றன. புகழ்பெற்ற வங்கிகளின் பட்டியலில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியும், ஹெச்.டி.எஃப்.சி வங்கியும் முன்னணியில் இருக்கின்றன. விசுவாசமான வங்கிகளில் பட்டியலில் சிட்டிபேங்க் முதலிடத்தில் இருக்கிறது. 

இந்திய வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகின்றன. வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கவும் போட்டி போடுகின்றன. 'வங்கி சேவையில் திருப்தியில்லை என்றால் ஒரு வங்கியில் இருந்து மாறி மற்றொரு வங்கியில் கணக்கை தொடங்கத் தயாராக இருக்கிறோம்' என்று 34.5% பேர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.