பிரதமர் மோடியின் முந்தைய அரசின் கடைசி சில மாதங்களில், அவசர சட்டங்கள் சில பிறப்பிக்கப்பட்டன. அவற்றை, சட்ட மசோதாக்களாக மாற்ற, மத்திய அமைச்சரவை, சமீபத்தில் ஒப்புதல் அளித்திருந்தது. அதன்படி, அவற்றை சட்டமாக மாற்ற, அவசர சட்டத்தின் நகல்கள் நேற்று(ஜூன் 20), பார்லிமென்டின், இரு சபைகளிலும் தாக்கல் செய்யப்பட்டன. பார்லிமென்ட் விவகாரத் துறை இணையமைச்சர்கள், அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் வீ.முரளீதரன் அவற்றை தாக்கல் செய்தனர்.
நடப்பு கூட்டத்தொடரில், 45 நாட்களுக்குள் அவை, சபைகளில் தாக்கல் செய்யப்பட்டு, சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும்; இல்லையேல் காலாவதியாகி விடும். நேற்று தாக்கல் செய்யப்பட்ட, அவசர சட்டங்களின் நகல்களில் முக்கியமானவை
வாகரத்து செய்ய, மூன்று முறை, 'தலாக்' என்ற வார்த்தையை சொல்வது சட்ட விரோதம் என்பதை வலியுறுத்தும், முத்தலாக் அவசர சட்டம்
* இந்திய மருத்துவ கவுன்சில் அவசர சட்டம்
* கம்பெனிகள் அவசர சட்டம்
* ஒழுங்கற்ற முதலீட்டு திட்டங்கள் அவசர சட்டம்
* ஜம்மு மற்றும் காஷ்மீர் இட ஒதுக்கீடு அவசர சட்டம்
* ஆதார் மற்றும் பிற அவசர சட்டங்கள்
* சிறப்பு பொருளாதார மண்டல அவசர சட்டம்
* மத்திய கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள் இட ஒதுக்கீடு அவசர சட்டம் மற்றும் சில.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.