பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை' இவ்வுலகில் வாழ பணம் மிகவும் முக்கியமானது. என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 31ம் திகதி உலக சிக்கன தினம் ( ( World Thrift Day) கொண்டாடப்படுகின்றது.
1924ல் இத்தாலியில் மிலான் நகரில் உலகின் பல பாகங்களிலிருந்தும் சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட சர்வதேச சேமிப்பு வங்கிகளின் மகாநாட்டில் 'உலக சிக்கன தினம்' என ஒரு தினமாக கொண்டாப்பட வேண்டும் என உறுதிசெய்யப்பட்டது. இத்தினத்தில் சேமிப்பு, சிக்கனம் போன்றவைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் காரணமாக வாழ்க்கையில் சிக்கனம் மிக முக்கியமான ஒன்றாகும் என்ற கருப்பொருளில் ஒவ்வொருவருடமும் சிக்கனதினம் அக்டோபர் 31 ம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றுது.
'ஆகாறு அளவு இட்டிது ஆயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை' அதாவது வரவு பெரிதாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை செலவு சிறிதாக இருக்கும் வரை கேடு இல்லை என்பது இதன் பொருளாகும்.. வருவாய்க்கு தக்க செலவு செய்பவனுக்கு தீங்கு கவலைகள் இல்லை. இதிலிருந்து சிக்கனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.