Thursday, 1 November 2018

கரூர் வரலாறு - பகுதி 2

அமராவதி நதிக்கரையில், தமிழகத்தின் மையப் பகுதியில், திருச்சிராப்பள்ளியையும், ஈரோட்டையும் இணைக்கும் இருப்புப் பாதை தடத்தில், அவ்விரு நகரங்களுக்கும் இடையில் அமைந்திருக்கும் நகரம் கரூர் ஆகும். கடந்த 1874ம் ஆண்டிலிருந்து கரூரானது நகராட்சியாக அங்கீரிக்கப்பட்டது. பின்னர் 1974ம் ஆண்டு முதல் முதல் நிலை நகராட்சியானது. தற்போது சிறப்பு நிலை நகராட்சியாக இருக்கிறது, கரூர் நகர ஒருங்கினைப்பில், கரூர் நகராட்சியோடு, இனாம் கரூர், தாந்தோன்றி போன்ற மூன்றாம் தர நகராட்சிகளும், ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன.

கடந்த 1951ம் ஆண்டில் கரூர் நகராட்சியின் மக்கள் தொகையானது சுமார் 42,155 ஆகும். கடந்த 2001ம் ஆண்டு கால வாக்கில் மக்கள் தொகையானது சுமார் 76,336 ஆக அதிகரித்தது. தற்போது 2014ம் ஆண்டு மக்கள் தொகையானது சுமார் 9,33,791 ஆக உள்ளது. பரப்பளவில் சுமார் 2.895.57 சதுர மீட்டராகும். (பார்க்க. தமிழ்நாடு அரசு இணையதளம்)

சேரர்களின் தலைநகரான வஞ்சியே இன்றைய கரூர் எனச் சொல்வதற்கு ஆதாரங்கள் உள்ளன. கரூர். சோழர்களின் ஆறு தலைநகரங்களில் ஒன்றாகும்.கரூரைச் சுற்றியுள்ள ஆறு நாட்டார் மலை, சுக்காலியூர் மற்றும் ஐவர்மலை போன்ற இடங்களில் காணப்படும் சமணர் படுக்கைகள் கி.மு. மூன்றாம் நு◌ாற்றாண்டிலிருந்து, கி.பி. இரண்டாம் நு◌ாற்றாண்டு வரை இந்தப் பகுதியில் சமணம் சிறப்புற்றிருந்ததாக சான்றுகள் கூறுகின்றன.   

தேவாரப் பாடல் பெற்ற ஏழு தலங்களில் கரூர் பசுபதிஸ்வரர் ஆலயமும் ஒன்று. பேரரசன் இராசராச சோழனின் ஆன்மிக குருவும் தஞ்சைப் பெரிய கோயிலின் லிங்கத்திருவுருவைப் பிரதிஷ்டை செய்தவரும் திருவிசைப்பா இயற்றியருவருமான கரூவூர் தேவர் அவதரித்த இடம் கரூர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.