: ஏசி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், , வாஷிங் மெஷின் உட்பட 19 பொருட்கள் மீதான சுங்க வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன்மூலம், மேற்கண்ட பொருட்களின் விலை அதிகரிக்க உள்ளது. உள்நாட்டில் உற்பத்தியை தொடங்குவதை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால் எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட பல இறக்குமதியை சார்ந்தே உள்ளன. இதனால் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகமாகி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு பொருட்களின் மீதான சுங்க வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன்படி ஏசி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் மீதான வரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏசி, பிரிட்ஜ் கம்ப்ரசர்கள் 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகவும், ஸ்பீக்கர்கள் 10ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளன. இதுபோல், ரேடியல் கார் டயர்கள் 10ல் இருந்து 15 சதவீதமாக உயர்ந்துள்ளது. வைரங்கள் மீதான வரி 5 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இதுபோல், பிளாஸ்டிக்கால் ஆன குளியலறை உபகரணங்கள், பிளாஸ்டிக் பாக்ஸ், பாட்டில், ஹாட் பேக், அலுவலக ஸ்டேஷனரி பொருட்கள், அலங்கார ஷீட், வளையல் சூட்கேஸ் மீதான வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. ஜெட் எரிபொருள் மீது 5 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் ₹86,000 கோடி மதிப்பிலான பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது. சீன டயர்கள் இறக்குமதியால் இந்திய டயர் உற்பத்தி நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றன. இதுபோல் சீனாவில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகின்றன. அமெரிக்கா சீனா இடையே வர்த்தகப்போர் வலுத்து வருகிறது. இதனால் அமெரிக்காவால் தடுக்கப்பட்ட பொருட்களை இந்தியாவுக்கு சீனா அதிகமாக ஏற்றுமதி செய்ய வாய்ப்புகள் உள்ளன. இதுபோல், பிற நாடுகளுக்கும் இந்தியா முக்கிய சந்தையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் இறக்குமதியை தடுக்கும் வகையில் இந்தியா வரி விதித்துள்ளதால் இறக்குமதி செய்யப்படும் டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் மற்றும் பிளாஸ்டிக், ஸ்டேஷனரி பொருட்கள் உட்பட அனைத்தும் விலை அதிகரிக்கும் எனவும், இந்திய உற்பத்தி ஊக்குவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.