Saturday, 29 September 2018

இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏஐ) இரு சக்கர வாகனங்கள், கார்களுக்கு அறிவித்த மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

நீண்ட காலத்துக்கான கட்டாய காப்பீடு மட்டுமின்றி ரப்பர், ஸ்டீல் மூலப்பொருட்கள் விலை உயர்வால் கடந்த சில மாதங்களாகவே நெருக்கடியை சந்தித்து வருவதாகவும், வாகன விற்பனை விலை கடந்த 2 ஆண்டில் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும் டூவீலர் உற்பத்தி துறையினர் தெரிவிக்கின்றனர். இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏஐ) இரு சக்கர வாகனங்கள், கார்களுக்கு அறிவித்த மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. மேலும் கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளும் இன்சூரன்ஸ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காப்பீட்டு காலத்தை அதிகரித்ததால் அதற்கான பிரீமியம் தொகை அதிகமாகியுள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு 75 சிசி மற்றும் அதற்கு குறைவான இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு வருட பாலிசி கட்டணம் 427 என்று இருந்தது. இது தற்போது 5 வருட பாலிசி என்பதால் 1,045 என்று கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதாவது, பாலிசிக்காக கூடுதலாக ரூ.618 செலுத்த வேண்டும். இதுபோல் 75 முதல் 150 சிசி டூவீலர்களுக்கு இன்சூரன்ஸ் 720ல் இருந்து 3,285 ஆகவும், 150 சிசி முதல் 350 சிசி வரை 980ல் இருந்து 5,453ஆகவும், 350 சிசிக்கு மேல் 2,323ல் இருந்து 13,034 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி டூவீலர் வாங்குபவர்கள் காப்பீட்டுக்கு என கூடுதலாக 618 முதல் 10,711வரை கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. இந்த காப்பீடு அதிகரிப்பு டூவீலர் விற்பனையில் சற்று மந்த நிலைைய ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதுமட்டுமே காரணமல்ல என்கின்றனர் வாகன உற்பத்தியாளர்கள். வாகனம் மற்றும் அதன் பாகங்கள் தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்களான ஸ்டீல், ரப்பர் விலை உயர்ந்துள்ளது. சில நிறுவனங்கள் டூவீலர்களை அதிகம் ஏற்றுமதி செய்கின்றன. இவற்றுக்கு மேற்கண்ட காரணங்களால் பெரிய சிக்கல் இல்லை. ஆனால், உள்நாட்டு சந்தையை மட்டுமே நம்பியுள்ள டூவீலர் உற்பத்தியாளர்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், டூ வீலர்களின் விற்பனை விலை கடந்த 2 ஆண்டுகளில் 10 சதவீதம் முதல் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. ஸ்டீல், ரப்பர் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை உயர்ந்ததால் தயாரிப்பு செலவு கையை கடிக்கிறது. தற்போது காப்பீடும் சேர்ந்து விட்டது. சந்தையில் போட்டியாளர்களை சமாளித்து தக்க வைக்க அதிக லாபம் இன்றி விலை நிர்ணயம் செய்கிறோம். ஆனால், எந்த அளவுக்கு இந்த இழப்பை தாங்குவது என தெரியவில்ைல. குறிப்பாக கடந்த 7 மாதங்களாகவே பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் விலை அதிகரிப்பும் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என டூவீலர் உற்பத்தி துறையினர் தெரிவிக்கின்றனர்.இதுதவிர, ஏபிஎஸ் தொழில்நுட்பம் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்ற விதி இன்னும் 6 மாதங்களில் அமலாகிறது. இதுவும் தயாரிப்பு செலவுகளை அதிகரிக்கும். மேலும் 2020 ஏப்ரல் 1 முதல் புதிய சுற்றுச்சூழல் விதிகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. * ஏபிஎஸ் தொழில்நுட்பம் கட்டாயம் மற்றும் புதிய சுற்றுச்சூழல் விதிகளுக்கு ஏற்ப இன்ஜின் தொழில்நுட்பங்களில் மாறுதல் ஆகியவையும் உற்பத்தி செலவை அதிகரிக்கச் செய்யும்.* ஸ்டீல், ரப்பர் விலை உயர்வு காரணமாக உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளன.* புதிய வாகன காப்பீடு விதிகளால் வாடிக்கையாளர்கள் டூவீலர்களுக்கு 618 முதல் 10,711வரை கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.