Friday, 14 September 2018

ஒவ்வொரு வங்கிகளிலும் பழைய நோட்டு டெபாசிட் செய்தது எவ்வளவு


கருப்பு பணத்தை ஒழிக்க 2016 நவம்பர் 8ம் தேதி ரூ.500, ரூ.1,000 நோட்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இந்த காலக்கட்டத்தில் ஜன்தன் கணக்குகளில் டெபாசிட் 80,000 கோடியாக உயர்ந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, பணமதிப்பு நீக்க கால பணிகள், டெபாசிட் முறைகேட்டில் சிக்கிய அதிகாரிகள் யார்?, ஒவ்வொரு வங்கிகளிலும் பழைய நோட்டு டெபாசிட் செய்தது எவ்வளவு உள்ளிட்ட விவரங்களை தகவல் உரிமை சட்டத்தில் சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் கோரியிருந்தார். இதற்கு ரிசர்வ் வங்கி பதில் தராததால் மத்திய தகவல் ஆணையத்தை அணுகினார். உரிய விவரங்களை ரிசர்வ் வங்கி அல்லது வங்கிகள் சமர்ப்பிக்க வேண்டும் என தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.