ஏசி, வாஷிங்மெஷின் உள்ளிட்ட 19 பொருட்களுக்கான சுங்க வரியை மத்திய அரசு உயர்த்தியது. இதை தொடர்ந்து, பண்டிகை சீசன் விற்பனையில் வாடிக்கையாளர்களை கவர தாராள தள்ளுபடி சலுகைகளை நிறுவனங்கள் அறிவிக்க தொடங்கியுள்ளன. நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில், ஏசி, பிரிட்ஜ், 10 கிலோவுக்கு கீழ் உள்ள வாஷிங்மெஷின்கள், ஸ்பீக்கர், ரேடியல் டயர்கள், பிளாஸ்டிக் பாக்ஸ், ஹாட்பேக், சூட்கேஸ் உள்ளிட்ட 19 பொருட்களுக்கான சுங்க வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதில் குறிப்பாக, பிரிட்ஜ், ஏசி, வாஷிங்மெஷின் மீதான வரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. உடனடியாக இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ் என பண்டிகை சீசன்கள் எதிர்வரும் நிலையில், இந்த வரி விதிப்பு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி நிறுவனங்களுக்கும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. எனவே, பண்டிகை விற்பனையை உயர்த்தும் வகையில் பல்வேறு சலுககைளை நிறுவனங்கள் அளிக்க முடிவு செய்துள்ளன. இதுகுறித்து பிரபல வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தினர் சிலர் கூறியதாவது: பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியை தொடர்ந்து வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை சற்று டல் அடித்தது. புதிய மாடல்கள் களம் இறக்கியபோதும், விலை உயர்வால் மக்கள் சிலர் தயக்கம் காட்டினர். ஜிஎஸ்டி அமலுக்கு முன்பு ஸ்டாக்கில் இருந்த பொருட்கள் விற்பனை அமோகமாக இருந்தது. ஜிஎஸ்டி உயர்வு வீட்டு உபயோக பொருட்களில் ஏசி விற்பனையைத்தான் பெரிய அளவில் பாதிக்கச் செய்தது. நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்த மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும், ஏற்கெனவே, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இறக்குமதி செலவு எகிறியுள்ளது. அதோடு வரியும் உயர்த்தப்பட்டுள்ளதால் அக்டோபர் மாதத்தில் இறக்குமதி செலவு அதிகரிக்கும். கம்ப்ரசர்கள் இறக்குமதி வரி உயர்வு பிரிட்ஜ் உற்பத்தி செலவை உயர்த்தும். இதுபோல் ஸ்பீக்கர்களில், வெளிநாடுகளில் இருந்து மிக உயர்ந்த தரத்திலான நிறுவன ஸ்பீக்கர்கள் மட்டுமின்றி, சாதாரண விலையில் விற்கப்படும் ஸ்பீக்கர் விலையும் அதிகரிக்கவே செய்யும். ஏனெனில், சீனாவில் இருந்து ஸ்பீக்கர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகின்றன. சில ஏசி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின்கள் கூட சீனாவில் இருந்து இறக்குமதியாகின்றன. பண்டிகை விற்பனையை கருத்தில் கொண்டு தள்ளுபடி சலுகைகள் அளிக்க முடிவு செய்துள்ளோம். இருப்பினும் டிசம்பர் அல்லது ஜனவரியில் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றனர்.* ஜிஎஸ்டியை தொடர்ந்து, ரூபாய் மதிப்பு சரிவால் இறக்குமதி செலவுகள் உயர்ந்து–்ள்ளன. எனவே, வீட்டு உபயோக பொருட்கள் மீதான வரியை இரட்டிப்பாக்கியது, தொழில்துறையினருக்கு பேரிடியாக அமைந்துள்ளது.* தற்போது பண்டிகை சீசனை கருத்தில் கொண்டு தள்ளுபடி சலுகை வழங்கினாலும், டிசம்பர் அல்லது ஜனவரியில் விலை உயர்–்த்த வேண்டிய நிலை உருவாகும்.* ஸ்பீக்கர் உள்பட பல சீனாவில் இருந்து இறக்குமதியாகின்றன. எனவே இவற்றின் விலையும் அதிகரிக்கும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.