Friday, 28 September 2018

உச்ச நீதிமன்ற தீர்ப்பால் வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கொடுத்த ஆதார் விவரங்களை நீக்கக் கோருவதற்கு வாடிக்கையாளர்களுக்கு உரிமை உள்ளது

அரசு சலுகைகள் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, வங்கிக்கணக்கு துவக்குதல், சிம்கார்டு வாங்குதல், ரயில், விமான டிக்கெட்கள், இன்சூரன்ஸ் என பலவற்றுக்கும் ஆதார் கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியானது. இதை தொடர்ந்து வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள்ஆதார் விவரங்களை சமர்ப்பிக்க கோரின. இதை எதிர்த்து தொடரப்பட்ட 27 வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உட்பட எந்த ஒரு தனியார் நிறுவனமும் ஆதார் விவரங்களை கட்டாயமாக சமர்ப்பிக்குமாறு வாடிக்கையாளர்களிடம் கேட்கக்கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: தனியார் நிறுவனம் எதுவும் ஆதார் விவரங்களை வாடிக்கையாளர்களிடம் கேட்கக் கூடாது என தெள்ளத்தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, ஆதார் சமர்ப்பித்தவர்கள் அவற்றை நீக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வங்கிகள், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் கேட்க இந்த தீர்ப்பு உரிமை வழங்கியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.