Friday, 21 September 2018

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டிற்கான, பி.பி.எஃப்., சிறுசேமிப்பு திட்டம் உள்ளிட்டவைகள் வட்டி விகிதத்தை 0.4% அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் அதிகரித்து வரும் வைப்பு விகிதங்களுக்கு ஏற்ப. சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் அறிவிக்கப்படும்.இதன்படி, 5 ஆண்டுகள் வரையிலான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 8.3 சதவீதத்திற்கு பதில், 8.7 சதவீதம் வட்டி வழங்கப்பட உள்ளது. இந்த வட்டி ஒவ்வொரு காலாண்டின் போதும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சேமிப்பு வைப்பு தொகைக்கான ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதமாகவே இருக்கும்.பிபிஎப் மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான ஆண்டு வட்டிவிகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கிஷான் விகாஸ் பத்திர வட்டிவிகிதம் 7.3 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை மாற்றி அமைக்கப்படுவது வழக்கமாகும். அதன்படி 2018-2019ம் நிதியாண்டில் மூன்றாவது காலாண்டுக்கான வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரையிலான காலாண்டிற்கு மறுசீரமைக்கப்பட்ட வட்டி விகிதம் குறித்து மத்திய நிதி அமைச்சகம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி. 5 ஆண்டு டெபாசிட், தொடர் வைப்பு தொகை, மூத்த குடிமக்கள் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.8, 7.3 மற்றும் 8.7 சதவீதமாக உயர்த்தப்ப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிறுசேமிப்பு வைப்பு தொகைக்கான வட்டி சதவீதம் 4 ஆகவே நீடிக்கிறது. பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்), தேசிய சேமிப்பு சான்றிதழ் ஆகியவற்றுக்கான ஆண்டு வட்டி விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிசான் விகாஸ் பத்தரம் மீதான வட்டி 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது மற்றும் 118 மாதங்களுக்கு மாறாக 112 மாதங்களில் முதிர்ச்சி அடையும். பெண் குழந்தை சேமிப்பு திட்டமான சுகன்ய சம்ரித்தி வட்டி விகிதம் 0.4 உயர்ந்து 8.5 சதவீதமாக உள்ளது. ஒன்று முதல் மூன்று ஆண்டு வரையிலான சேமிப்பு டெபாசிட்டுக்களுக்கு 0.3சதவீதம் வட்டி உயர்ந்துள்ளது.

1 comment:

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.