Saturday, 18 August 2018

வருமான வரி ₹10.03 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக, மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

ி: கடந்த நிதியாண்டில் வருமான வரி ₹10.03 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக, மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. வருமான வரித்துறை சார்பில் கவுஹாத்தியில் நடந்த கருத்தரங்கில், மத்திய நேரடி வரிகள் ஆணைய உறுப்பினர் ஷாப்ரி பட்டசாலி பேசுகையில், ‘‘ கடந்த 2017-18 நிதியாண்டில் 6.92 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ₹10.03 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் புதிதாக 1.06 கோடி பேரை வரி வரம்புக்குள் கொண்டு வந்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மேலும் 1.25 கோடி பேரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றார். வருமானவரித்துறையின் வடகிழக்கு மண்டல முதன்மை ஆணையர் எல்.சி.ஜோஷி ராணி கூறுகையில், ‘‘வடகிழக்கு மண்டலத்தில் மட்டும் ₹7,097 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறை வருமான வரி வசூல் இலக்கை எட்ட உறுதி பூண்டுள்ளது. இதற்காக ஆயகர் சேவை மையங்கள் நாடு முழுவதும் திறக்கப்பட்டு வருகின்றன. இது வருமான வரி செலுத்துவோருக்கு சேவை அளிக்கவும் உதவும் என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.