எல்ஐசி தென்மண்டலம் 14.11.17ல் கேன்சர் கவர் பாலிசி தொடங்கியது. இதுவரை 1.31 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலிசிகள் விற்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரியை உள்ளடக்கிய தென்மண்டலம் 39,190 கேன்சர் கவர் பாலிசி விற்று இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. இதில், திருச்சூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோட்டயம், கோழிக்கோடு கோட்டங்கள் முதல் 5 இடங்களை பிடித்தன. 2017-18 நிதியாண்டில் 23,843 ஹெல்த் பாலிசி உரிமங்களை தீர்வு செய்து ரூ.32.31 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 25 லட்சம் பேர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேன்சர் பாதிக்கப்பட்ட 70% பேருக்கு சிகிச்சை செலவுக்கான பொருளாதார வசதி இல்லை. சிகிச்சை செலவு ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வர உள்ளது. எனவே 20 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் கேன்சர் கவர் பாலிசியில் சேரலாம். இதுபோல் ஜீவன் ஆரோக்யா பாலிசியில் 140 பெரிய அறுவை சிகிச்சைகள் மற்றும் 140 பகல்நேர அறுவை சிகிச்சைகள் தவிர பிற அறுவை சிகிச்சைகளுக்கும் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு எல்ஐசி கிளை, முகவர் அல்லது www.licindia.in அணுகலாம் என்றார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.