Thursday, 12 October 2017

இந்தாண்டு ஜி.டி.பி., 7 சதவீதமாக குறையும்: உலக வங்கி மதிப்பீடு

‘பண மதிப்­பி­ழப்பு நட­வ­டிக்கை, ஜி.எஸ்.டி., அறி­மு­கம் ஆகி­ய­வற்­றின் தாக்­கத்­தால், இந்­தாண்டு, ஜி.டி.பி., எனப்­படும், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 7 சத­வீ­த­மாக குறை­யும்’ என, உலக வங்கி மதிப்­பிட்டு உள்­ளது.

இது குறித்து, உலக வங்கி வெளி­யிட்­டுள்ள அறிக்கை: கடந்த, 2015ல், இந்­தி­யா­வின், ஜி.டி.பி., 8.6 சத­வீ­த­மாக இருந்­தது; இது, இந்­தாண்டு, 7 சத­வீ­த­மாக குறை­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இதற்கு, மத்­திய அரசு மேற்­கொண்ட, பண மதிப்­பி­ழப்பு நட­வ­டிக்கை, ஜி.எஸ்.டி., அறி­மு­கம் ஆகி­ய­வற்­றால் ஏற்­பட்ட தாக்­கமே கார­ணம். அதே சம­யம், மத்­திய அரசு மேற்­கொள்­ளும் எண்­ணற்ற சீர்­தி­ருத்­தங்­களும், அரசு திட்­டங்­க­ளுக்­கான கூடு­தல் நிதி ஒதுக்­கீ­டும், பெருகி வரும் தனி­யார் முத­லீ­டு­களும், 2018ல், ஜி.டி.பி., வளர்ச்­சியை, 7.3 சத­வீ­த­மாக உயர்த்­தும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.