நடப்பு, அக்., – டிச., வரை, தேசிய சிறு சேமிப்பு திட்டங்களில் வழங்கப்படும் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை’ என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.பொது சேமநல நிதி, கிசான் விகாஸ் பத்திரம், சுகன்ய சம்ரிதி உள்ளிட்ட, தேசிய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள், 2016 ஏப்., முதல், காலாண்டுக்கு ஒருமுறை சீராய்வு செய்யப்படுகின்றன. ஜூலை – செப்., வரை உள்ள, தேசிய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம், டிச., வரையிலான காலாண்டுக்கும் தொடரும். தற்போது, பொது சேமநல நிதியில் மேற்கொள்ளும் முதலீட்டிற்கு, 7.8 சதவீதம் ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. இது, 115 மாதங்கள் முதிர்ச்சி காலத்தை கொண்ட, கிசான் விகாஸ் பத்திரத்திற்கு, 7.5 சதவீதமாக உள்ளது.சுகன்ய சம்ரிதி திட்டம் மற்றும் மூத்த குடிமக்களின் சேமிப்பு திட்டத்திற்கு, முறையே, 8.3 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.