பங்குச் சந்தையில் பட்டியலிட்டுள்ள நிறுவனங்கள், வங்கிகளுக்கு திரும்பச் செலுத்த தவறிய கடன் விபரங்களை அளிக்கும் நடைமுறையை, மறு அறிவிப்பு வரும் வரை, ஒத்தி வைத்துள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, ‘செபி’ தெரிவித்து உள்ளது.
கடந்த மாதம், ‘செபி’ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ‘பங்குச் சந்தை பட்டியலில் உள்ள நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில், கடன் பெற்று திரும்ப அளிக்காத பட்சத்தில், அது குறித்த விபரங்களை, திரும்பச் செலுத்த தவறிய, 24 மணி நேரத்திற்குள், பங்குச் சந்தைகளுக்கு தெரிவிக்க வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த நடைமுறை, அக்., 1 முதல், அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.வாராக்கடன்இந்நிலையில் நேற்று, ‘செபி’ வெளியிட்டுள்ள அறிக்கை:பங்குச் சந்தை பட்டியலில் உள்ள நிறுவனங்கள், கடனை திரும்பச் செலுத்த தவறிய விபரங்களை அளிக்கும் நடைமுறை, அக்., 1 முதல், அமலுக்கு வர இருந்தது.இந்நிலையில், இந்த திட்ட அமலாக்கத்தை நிறுத்தி வைக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, இத்திட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.வங்கிகளின் வாராக்கடன், 8 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளதை அடுத்து, அதை கட்டுக்குள் கொண்டு வர, ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு உள்ளன.இந்நிலையில், பங்குச் சந்தையில் பட்டியலிட்டுள்ள, நிறுவனங்களின் வாராக்கடன் விபரங்களை, பங்கு முதலீட்டாளர்களும், அவ்வப்போது அறிந்து கொள்ள வேண்டும் என, ‘செபி’ முடிவு செய்துள்ளது.இதன் தொடர்ச்சியாக தான், பங்குச் சந்தையில் பட்டியலிட்டுள்ள, அனைத்து நிறுவனங்களும், திரும்ப செலுத்தாத கடன் விபரங்களை அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவெடுத்து உள்ளது.தாமதம்தற்போது, பங்குச் சந்தை பட்டியலில், ஒரு நிறுவனம் இடம் பெற வேண்டுமென்றால், கடன் பத்திரங்கள் மீதான வட்டி அல்லது அசலை திரும்பத் தருவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்த தகவலை தெரிவிக்க வேண்டும்.எனினும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெற்று உள்ள கடன், திரும்பத் தராத கடன் போன்ற விபரங்கள் கோரப்படுவதில்லை.தற்போது, இந்த விபரங்களையும், அதற்கென உள்ள படிவத்தில் தாக்கல் செய்வதை கட்டாயமாக்க, ‘செபி’ திட்டமிட்டு உள்ளது.ஜூலையில், பங்குச் சந்தை பட்டியலில் உள்ள வங்கிகளுக்கு, ‘செபி’ அறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தது.அதில், ‘ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்த வாராக்கடன், வங்கியின் நிதிநிலை அறிக்கையில், 15 சதவீதத்திற்கு மேல் இருந்தால், அது குறித்த விபரங்களை தெரிவிக்க வேண்டும்’ என, கோரப்பட்டிருந்தது.இதன் மூலம், ஒரு வங்கியின் ஆண்டு நிதிநிலை அறிக்கை வெளியாகும் போதே, வாராக்கடன் குறித்தும் அறிந்து, அதற்கேற்ற நடவடிக்கையை, ரிசர்வ் வங்கி எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.