Tuesday, 29 August 2017

சொகுசு கார்களுக்கு உயருகிறது வரி; அவசர சட்டம் பிறப்பிக்க திட்டம்

சொகுசு கார்­க­ளுக்கு, தற்­போது உள்ள கூடு­தல் வரியை, 15 சத­வீ­தத்­தில் இருந்து, 25 சத­வீ­த­மாக உயர்த்த, மத்­திய அரசு, அவ­சர சட்­டம் பிறப்­பிக்க உள்­ளது. இத­னால், நடுத்­தர, பெரிய, சொகுசு கார்­களின் விலை உய­ரும்.

ஜூலை­யில் அறி­மு­க­மான, ஜி.எஸ்.டி., முறை­யில், பன்­முக பயன்­பாட்டு கார், நடுத்­தர, பெரிய கார் ஆகி­ய­வற்­றுக்கு, 28 சத­வீத வரி விதிக்­கப்­பட்டு உள்­ளது. இத்­து­டன், அதி­க­பட்­ச­மாக, ௧5 சத­வீத கூடு­தல் வரி­யும் உள்­ளது.

இழப்பீடு குறையும்:

ஜி.எஸ்.டி.,யால், மாநி­லங்­க­ளுக்கு ஏற்­படும் வரி இழப்பை ஈடுசெய்ய, கூடு­தல் வரி வசூ­லிக்­கப்­ப­டு­கிறது. இதன்­படி, மேற்­கண்ட கார்­க­ளுக்­கான மொத்த வரி, தற்­போது, 43 சத­வீ­த­மாக உள்­ளது. இது, முந்­தைய பல­முனை வரி திட்­டத்­தில், 52 – 54.72 சத­வீ­தம்; கூடு­த­லாக, 2.5 சத­வீத மத்­திய விற்­பனை வரி, ஆயத்­தீர்வை ஆகி­ய­வற்றை கொண்­ட­தாக இருந்­தது.

ஜி.எஸ்.டி.,யில், வரிச்­சுமை குறைந்­த­தால், பெரிய, சொகுசு கார்­கள் விலை, 1 – 3 லட்­சம் ரூபாய் வரை குறைந்­தது. அதே சம­யம், இந்த விற்­ப­னை­யில், கூடு­தல் வரி குறை­வ­தால், மாநி­லங்­க­ளுக்­கான இழப்­பீடு குறை­யும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து, ஆக., 5ல், மத்­திய நிதி­ய­மைச்­சர் அருண் ஜெட்லி தலை­மை­யில், டில்­லி­யில், ஜி.எஸ்.டி., குழு கூட்­டம் நடை­பெற்­றது. அதில், பன்­முக பயன்­பாட்டு கார், நடுத்­தர, பெரிய, சொகுசு கார் ஆகி­ய­வற்­றுக்­கான அதி­க­பட்ச கூடு­தல் வரியை, 15லிருந்து, 25 சத­வீ­த­மாக உயர்த்த ஒப்­பு­தல் வழங்­கப்­பட்­டது. இது தொடர்­பாக, ஜி.எஸ்.டி., சட்­டத்­தில் திருத்­தம் செய்ய, மத்­திய அர­சுக்கு பரிந்­து­ரைப்­பது என, கூட்­டத்­தில் முடிவு செய்­யப்­பட்­டது.

வரி உயர்வு:
இது குறித்து, நிதி­ய­மைச்­சக அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: கார்­க­ளுக்­கான கூடு­தல் வரியை உயர்த்த, மாநி­லங்­க­ளுக்கு இழப்­பீடு வழங்க வகை செய்­யும், ஜி.எஸ்.டி., சட்­டம், பிரிவு – 8ல் திருத்­தம் செய்ய வேண்­டும். மத்­திய அமைச்­ச­ர­வைக் குழு, செப்., 9ல் கூட உள்­ளது. அதில், ஜி.எஸ்.டி., கவுன்­சில் அளித்த பரிந்­து­ரைப்­படி, கூடு­தல் வரி உயர்­வுக்­கான சட்­டத்­தி­ருத்­தம் குறித்து ஆலோ­சிக்­கப்­படும். அதற்கு முன், வரியை உயர்த்­து­வது தொடர்­பாக, நெடுஞ்­சாலை, போக்­கு­வ­ரத்து, கன­ரக தொழில் உள்­ளிட்ட அமைச்­ச­கங்­க­ளி­டம் ஆலோ­சனை கேட்­கப்­படும். இதை­ய­டுத்து, அவ­சர சட்­டம் மூலம், கார்­க­ளுக்­கான கூடு­தல் வரி உயர்த்­தப்­படும் என, தெரி­கிறது.

பார்லி., கூடும் போது தான், ஒரு சட்­டத்­திற்கு ஒப்­பு­தல் பெறவோ அல்­லது சட்­டத்­தில் திருத்­தம் செய்­யவோ முடி­யும். பார்லி., கூட்­டம் நடை­பெ­றாத காலத்­தில், அவ­சர சட்­டம் மூலம், அத்­த­கைய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­லாம். எனி­னும், அவ­சர சட்­டம் பிறப்­பிக்­கப்­பட்ட ஆறு மாதங்­க­ளுக்­குள், பார்­லி­மென்­டின் ஒப்­பு­தல் பெற வேண்­டும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.