Tuesday, 29 August 2017

சொத்து வரி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?தெரிந்து கொள்வோம்.

ஒரு சொத்து வாங்கும் பதிவுக் கட்டணங்கள் மற்றும் செலுத்த வேண்டிய முத்திரைக் கட்டணங்கள் செலுத்த வேண்டும். இதனை தொடர்ந்து அந்த சொத்திற்கான வரியை ஒவ்வொரு வருடமும் தவறாமல் செலுத்த வேண்டும்.
முதன்மையாக சொத்து வரி சமுதாயத்தில் தூய்மை, சுகாதாரம், பூச்சிக் கட்டுப்பாடு போன்ற பல்வேறு சேவைகளுக்கு அரசாங்கத்திற்கு வருவாய் அளிக்க செலுத்தப்படுகிறது.

நடவடிக்கை
ஒரு நபர் இந்த செலுத்த வேண்டியத் தொகையை செலுத்த மறுத்தால் சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பப்படும். மேலும், இந்த நிர்வாகம் தண்ணீர் இணைப்பு போன்ற சில சேவைகளை வழங்க மறுக்கும்.

  

சொத்துவரிக் கணக்கீட்டைத் தீர்மானிக்கும் சொத்துவரி காரணிகள்
சொத்துவரி விதிப்புத் தொகை நகரமன்ற நிர்வாகத்தின் அடிப்படையில் சொத்து உரிமையாளர் செலுத்த வேண்டிய தொகை நிர்ணயிக்கப்படுகிறது.
இத்தொகையை தீர்மானிக்க இதர காரணிகளும் உடன், இவை உங்களுக்காக

  

இதர காரணிகள்
1. சொத்தின் அமைவிடம் மற்றும் சொத்தின் அளவு
2. மேலும் ஒரு சொத்தின் இயல்பை பொறுத்து, அந்த சொத்து குடிப்பெயருவதற்கு தயாராக இருக்கிறதா அல்லது கட்டுமானத்தின் கீழ் இருக்கிறதா என்பதை பொறுத்தும் வரிவிதிப்பு சார்ந்திருக்கிறது.
3. சொத்து உரிமையாளரின் பாலினம் - சொத்து உரிமையாளர் ஒரு வேளை பெண்ணாக இருந்தால் அவருக்கு சில தள்ளுபடி இருக்கின்றன.
4. வயது மூத்த குடிமக்களுக்கு சில பொருந்தக் கூடிய தள்ளுபடிகள் கிடைக்கும்.
5. நகராட்சி மன்ற நிர்வாகம் வழங்கப்படும் குடியிறுப்பு வசதிகளில் சலுகைகளை தீர்மானிக்கும்.
  

சொத்துவரிக் கணக்கீடு
சொத்துவரி அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய சொத்து மதீப்பீட்டின் அடிப்படையில் செலுத்த வேண்டிய சொத்துவரி தீர்மானிக்கப்படுகிறது.
ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் சொத்துவரி செலுத்தியதற்கான ரசீது கையுதவிக்கு வரும். இது உண்மையான சொத்து உரிமையாளர் யாரென்பதையும் தீர்மானிக்க உதவும்.
மேலும், நீங்கள் சொத்துக் கடன் வாங்கும் எண்ணத்திலிருந்தால் சொத்துக் கடன் பெறுவதற்கும் இந்த ரசீது உதவும்.

  

சொத்துவரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டச் சொத்துக்கள்
தொழுகைக்காக அமைக்கப்பட்ட காலி நிலங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள் அத்துடன் அரசாங்க ஸ்தாபனங்கள் ஆகியவற்றிற்கு சொத்துவரி செலுத்தத் தேவையில்லை.
கணக்கைத் துவங்குவதை விட, இது ஒரு உறவின் துவக்கம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.