Friday, 27 July 2018

வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்க, வருமான வரி சட்டத்தில் பிரிவு 234எப் சேர்க்கப்பட்டுள்ளது

 புதுடெல்லி : வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டுக் கான வருமான வரி கணக்கு (மதிப்பீட்டு ஆண்டு 2018-19) தாக்கல் செய்ய இந்த மாதம் 31ம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. அதோடு, வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்க, வருமான வரி சட்டத்தில் பிரிவு 234எப் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள், வருமான வரி விதிகளுக்கு உட்பட்டு ரூ10,000 வரை அபராதம் செலுத்த வேண்டி வரும். அதாவது ஏற்கெனவே விதித்திருந்த கெடு தேதியான ஜூலை 31க்குள் கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் ரூ5,000, ஜனவரி 1ம் தேதிக்கு மேல் தாக்கல் செய்தால் ரூ10,000 அபராதம் செலுத்த வேண்டும். ஆண்டு வருவாய் ரூ5 லட்சத்துக்கு கீழ் இருந்தால் அதிகபட்ச அபராதம் ரூ1,000 மட்டுமே. இதனால், கெடு நெருங்கியதால் வரி செலுத்துவோர் பெரும் பதற்றத்துடன் இருந்தனர். இதற்கிடையில், கெடு தேதியை ஒரு மாதம் நீட்டித்து மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து நிதி அமைச்சகம் ட்விட்டரில், மத்திய நேரடி வரிகள் ஆணையம், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கெடுவை ஜூலை 31ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 31ம் தேதிக்கு நீட்டிப்பு செய்துள்ளது என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.