Wednesday, 18 July 2018

இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ்

இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 228 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 196.19 புள்ளிகளாக அதிகரித்துள்ளதையடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 227.91 புள்ளிகள் உயர்ந்து 36,747.87 புள்ளிகளாக உள்ளது. எண்ணெய் & எரிவாயு, வங்கி, பொதுத்துறை நிறுவனம், மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற நிறுவன பங்குகள் விலை அதிகரித்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 62.05 புள்ளிகள் அதிகரித்து 11,070.10 புள்ளிகளாக உள்ளது.எச்.டி.எஃப்.சி. வங்கி, எச்.டி.எஃப்.சி. வங்கி, சன் பார்மா, ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, எச்டிஎஃப்சி, ஆசிய பெயிண்ட், விப்ரோ, பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோ கார்ப், மாருதி சுசூகி, இன்ஃபோசிஸ், பவர்கிரிட், எல் அண்ட் டி, ரிலையன்ஸ், டிசிஎஸ், போன்ற நிறுவன பங்குகள் விலை 1.65% வரை உயர்ந்து காணப்பட்டது.ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.43%, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.29%, மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.90% உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.22% வரை அதிகரித்து முடிந்தது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.