Friday, 27 July 2018

தொழில் புரட்சியை ஏற்படுத்த இந்தியா விரும்புகிறது’’

பிரிக்ஸ் நாடுகளுடன் சேர்ந்து 4வது தொழில் புரட்சியை ஏற்படுத்த இந்தியா விரும்புகிறது’’ என பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் 10வது மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடந்தது. உகாண்டா பயணத்தை முடித்து தென் ஆப்பிரிக்கா சென்ற மோடி, அங்கு நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: நான்காவது தொழிற்புரட்சியை ஏற்படுத்த பிரிக்ஸ் நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா விரும்புகிறது. இதற்கு அனைத்து நாடுகளும் தங்கள் சிறந்த தொழில்நுட்ப முறைகள், கொள்கைகளை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பங்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், சிறந்த சேவையை அளிக்கவும் உதவும். முதல் தொழில்புரட்சி 18ம் நூற்றாண்டில் ஏற்பட்டது. 4வது தொழில் புரட்சி, நான்கு பெரிய தொழில் சகாப்தமாக இருக்கிறது. முதலீட்டை விட 4வது தொழில்புரட்சி அதிக முக்கியத்துவம் பெறும். அதிக திறமை, ஆனால் தற்காலிக பணிதான், வேலைவாய்ப்பின் புதிய முகமாக இருக்கும். தொழிற்சாலை உற்பத்தி மற்றும் வடிவத்தில் மாற்றங்கள் இருக்கும். எதிர்க்கால தேவைக்கு இளைஞர்களை தயார்படுத்தும் அளவுக்கு பள்ளி, பல்கலை பாடத்திட்டத்தில் மாற்றம் தேவை என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.