Thursday, 26 July 2018

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 37,000 புள்ளிகளை கடந்து 37,014.65 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் வராலாற்றில் முதன்முறையாக 37,000 புள்ளிகளை தொட்டு சாதனை படைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர்களுக்கு இடையேயான சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் தொழில்துறைக்கான சுங்கவரியை குறைப்பது, சமையல் எரிவாயு போன்றவற்றை ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்வது போன்ற ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் தொடங்கியது முதலே பங்குச்சந்தைகள் எழுச்சியுடன் காணப்பட்டன.மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 37,000 புள்ளிகளை கடந்து 37,014.65 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இன்று பங்குச் சந்தை வர்த்தகம் ஆரம்பித்த முதல் சில நிமிடங்களிலேயே, சென்செக்ஸ் 118.43 புள்ளிகள் அல்லது 0.32 சதவிகிதம் அதிகரித்தன. இதனைத் தொடர்ந்து சென்செக்ஸ் 37,000 புள்ளிகளை முதன்முறையாக கடந்து சாதனை படைத்தது.தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் ஏற்றத்துடனையே காணப்பட்டது. இன்று காலை நிஃப்டி, 11,132.95 என்ற நிலையில் தொடங்கியது.நிப்டி 40.20 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சமான 11,172.20. புள்ளிகளை எட்டியது. இவ்வாண்டில் 14வது முறையாக நிப்டி உச்சத்தை தொட்டது. நிஃப்டியில் இருக்கும் 50 ஸ்டாக்குகளில் 32 ஸ்டாக்குகளின் புள்ளிகள் இன்று காலையிலேயே அதிகரித்தன. பாரத ஸ்டேட் வங்கி, ஐடிசி, லார்சன் அண்டு டூப்ரோ, பாரதி ஏர்டெல், ஹீரோ மோட்டோ கார்ப் ஆகிய நிறுவனங்கள் சென்செக்ஸில் அதிக புள்ளிகள் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.