Tuesday, 12 June 2018
இன்றய சென்செக்ஸ் புள்ளி உயர் நிலை....

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 84 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 39.80 புள்ளிகளாக உயர்ந்துள்ளதையடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 84.35 புள்ளிகள் உயர்ந்து 35,567.82 புள்ளிகளாக உள்ளது. சுகாதாரம், நுகர்வோர் பொருட்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, வங்கி மற்றும் ஆட்டோ போன்ற நிறுவன பங்குகள் விலை 0.84% வரை அதிகரித்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 29.85 புள்ளிகள் அதிகரித்து 10,816.80 புள்ளிகளாக உள்ளது.டாக்டர் ரெட்டிஸ், விப்ரோ, அதானி போர்ட்ஸ், எம் & எம், பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, இன்டஸ் இன்ட் வங்கி, ஐடிசி லிமிடெட், சன் பார்மா, எல் அண்ட் டி, டிசிஎஸ் மற்றும் ஏஷியன் பெயின்ட்ஸ் போன்ற நிறுவன பங்குகள் விலை 1.80% வரை உயர்ந்து காணப்பட்டது.ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.39%, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.41% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.39% உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழிற்துறை நிலைபெற்று முடிந்தது.
Labels:
guna
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.